விசாகப்பட்டினத்தில் இருந்து ரேணிகுண்டாவுக்கு விமானத்தில் பறந்த இதயம்

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த சன்னியாசம்மா கடந்த 16 ஆம் தேதி விபத்தில் சிக்கி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சன்னியாசம்மா மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல்உறுப்புகளை தானமாக செய்ய கணவர் ஆனந்தராவ் விருப்பம் தெரிவித்தார். அதனடிப்படையில் அவரது இதயம் திருப்பதி ஸ்ரீபத்மாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு மருத்துவர்கள் குழுவினருடன் இதயம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சாலை மார்கமாக திருப்பதி அடிவாரத்தில் உள்ள ஸ்ரீபத்மாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறுமிக்கு பொருத்தப்பட்டது.

Exit mobile version