தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

இரண்டாம் நிலைக்காவலர்களுக்கான தேர்வு வரும் 25 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் அதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்குரிய பொதுத் தேர்வுக்கான விளம்பரத்தினை சமீபத்தில் வெளியிட்டது.

இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை உட்பட 32 மாவட்டங்களிலுள்ள தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. எழுத்துத் தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்குரிய அனுமதிச் சீட்டை விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org இணையதளத்தில் பயனர் அடையாள எண் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உரிய செலுத்தும் சீட்டு பெற்றிருந்தும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய இயலாத விண்ணப்பதாரர்கள் 044-40016200 மற்றும் 9789035725 போன்ற உதவி மைய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Exit mobile version