சலூன் கடைகளை திறக்க அனுமதி? சிகை அலங்கரிப்போர் நலச்சங்கம் தலைமை செயலகத்தில் கோரிக்கை மனு

சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கக்கோரி சிகை அலங்கரிப்போர் நலச்சங்கத்தினர் சென்னை தலைமை செயலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

கொரானா பரவல் காரணமாக முடி திருத்தும் நிலையம் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு சிகை அலங்கரிப்போர் நலச்சங்கத்தினர் சென்னை தலைமை செயலகத்தில் மனு அளித்துள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர், வருவாய் துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து மனுவை அளித்த அவர்கள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

சலூன் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது எனவும், காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

பேட்டி : ஆறுமுகம் (தலைவர் – தமிழ்நாடு சிகை அலங்கரிப்போர் நலச்சங்கம்).

Exit mobile version