வேலூரில் ஆலங்கட்டி மழைப் பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி

வேலூரில் திடீரென ஆலங்கட்டி மழைப் பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்றிரவு இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. கொணவட்டம், சேண்பாக்கம், அல்லாபுரம், வேலப்பாடி, சாய்நாதபுரம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version