உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஜிம் மாஸ்டர்

ராமநாதபுரத்தில், இளைஞர்களுக்கு உடற்பயிற்சி விழிப்புணர்வை ஏற்படுத்தி காவல்துறை மற்றும் ராணுவம் உள்ளிட்ட அரசுப்பணிகளுக்கு தயார்படுத்தி வருகிறார் ஜிம் மாஸ்டர் ஒருவர்..

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகே சேதுநகர் என்னும் கிராமத்தில் ஜிம் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இலங்காமணி கிராமத்தை சேர்ந்த லிங்கராஜா என்பவர் இதை நடத்தி வருகிறார். “லாப நோக்கத்திற்காக நடத்தாமல், காவல்துறை, எல்லை பாதுகாப்புப்படை மற்றும் ராணுவம் உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வமாக உள்ள இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சியளித்து வருவதாக அவர் கூறுகிறார். கிராமத்து இளைஞர்களை ஆணழகன் போட்டிகளுக்கு தயார் படுத்தி வருவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

Exit mobile version