நக்சல்களுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை

ஜார்கண்டில் நக்சல்களுடனான துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமணடைந்தார். நக்சல்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தும்கா மாவட்டத்தில் உள்ள தல்டாங்கல் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில் வீரர் நிராஜ் செட்ரி வீர மரணம் அடைந்தார். நக்சல்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்த 4 வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தும்கா நகர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version