தமிழ்நாடு விரைவு ரயிலில் துப்பாக்கி குண்டு கண்டெடுப்பு

டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு விரைவு ரயிலில் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய, பாகிஸ்தான் எல்லையில் போர்ப்பதற்றம் நிலவிவரும் சூழலில், அசம்பாவிதங்களை தவிர்க்க, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் அனைத்து ரயில்நிலையங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பை மேற்கொள்ள ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலையங்களில் பலகட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு விரைவு ரயிலின் ஏ1 பெட்டியில் 20வது இருக்கையில் இருந்து துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த இருக்கையில் பர்வேஸ்வரய்யா என்ற பயணி, டெல்லியிலிருந்து சென்னைக்கு பயணம் செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version