முப்பது நொடியில் 12-காண்கிரீட் கற்களை காலால் உடைத்து, சென்னை இளைஞர் சாதனை!

முப்பது நொடியில் 12-காண்கிரீட் கற்களை காலால் உடைத்து, சென்னை இளைஞர் உதயகுமார் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கந்தன்சாவடியில் இயங்கி வரும் தேக்ஹோண்டா தற்காப்புக்கலை அகாடெமியில், சென்னையை சேர்ந்த உதயகுமார் என்ற இளைஞர் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், 30 நொடிகளில் 12 காண்கிரீட் கற்களை காலால் உடைத்து, இவர் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இளைஞரின் உலக சாதனையை பாராட்டி லண்டனில் இருந்து உலக கின்னஸ் சாதனை சார்பில் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது. இதுவரை தேக்ஹோண்டாவில் இந்தியாவுக்காக 5 தங்கப்பதக்கமும், தமிழகத்திற்காக 10 தங்கப்பதக்கங்களை வென்று, இளைஞர் உதயகுமார் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version