குரூப்-I தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-I தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான குரூப்-I முதல்நிலை தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 20 ஆம் தேதியில் தொடங்கி, அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-I தேர்வில் விண்ணப்பிக்கும் தேர்வர்களின் கல்வி தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக் கட்டணம் போன்ற அனைத்து தகவல்களையும் டிஎன்பிஎஸ்சி வரும் நாட்களில் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று கூறியுள்ளது.

Exit mobile version