ஆரணியில் ரூ.3 கோடி மதிப்பில், 139 பயனாளிகளுக்கு பசுமை வீடு திட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள 139 பயனாளிகளுக்கு, 3 கோடி மதிப்பில், பசுமை வீடு கட்டவதற்கான உத்தரவு நகல்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வழங்கினார்.

தமிழக அரசின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான பசுமை வீடுகள் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இதனை ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் 3 கோடி ருபாய் மதிப்பில் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவு நகலை 139 பயனாளிகளுக்கு இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தூசி ஆனந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version