அதிபர் சிறிசேனாவிற்கு எதிராக கொழும்புவில் பிரம்மாண்ட பேரணி

இலங்கை அதிபர் சிறிசேனாவிற்கு எதிராக கொழும்புவில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது.

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அக்டோபர் 26-ம் தேதி அதிபர் சிறிசேனா பதவிநீக்கம் செய்தார். புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை நியமித்தார். மேலும் நாடாளுமன்றத்தையும் முடக்கினார். இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

தனது பதவி நீக்கத்தை ஏற்க மறுத்த ரணில் விக்ரமசிங்சே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தினார். வரும் 14-ம் தேதி கூடவுள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணிலுக்கு தங்களது ஆதரவை அளித்துள்ளது.

இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்சேவின் ஆதரவாளர்கள் கொழும்புவில் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். கொழும்பு காலிமுகத் திடலில் ஆரம்பித்த பேரணி, சுதந்திர சதுக்கத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணியால் கொழும்புவில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Exit mobile version