உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டை, நவீன சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை

புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்கட்டை தாலுக்கா திருக்கட்டளையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். சமீபத்தில் நண்பருடன் ஏற்பட்ட நில பிரச்சனையில் ஒற்றை குழல் துப்பாக்கியால் அவர் சுடப்பட்டார். இடது காலில் குண்டு தசையை ஊடுருவி எலும்பிற்கு பக்கத்தில் இருந்தது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள் துப்பாக்கி குண்டை சீயாம் என்ற கருவி மூலம் அதி நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

அனுமதிக்கப்பட்ட ஐந்தரை மணி நேரத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டதாக மருத்துவ கல்லூரி முதல்வர் தெரிவித்தார். 

Exit mobile version