ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாகப்பட்டினத்தை பார்வையிடுகிறார்

கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாகை சென்றுள்ளார்.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த இடங்களை நேற்று முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டனர். இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாகப்பட்டினம் பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்.

இதற்காக இன்று அதிகாலை நாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தார். கடலோர பகுதிகளை பார்வையிடும் அவர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இரவு திருவாரூர் செல்லும் அவர் நாளை திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் புயல் பகுதிகளை பார்வையிடுகிறார்.

 

Exit mobile version