தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி!!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை தனியார் மருத்துவனை தெரிவித்துள்ளது.

ஆளுநரின் பாதுகாப்பு காவலர்கள் உட்பட ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆளுநர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடிந்த நிலையில் ஆளுநர் மாளிகை திரும்பிய நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அறிகுறியற்ற தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆளுநரின் உடல்நிலை சீராக உள்ளதால் ஆளுநர் மாளிகையில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version