ஆளுநர் கிரண்பேடியை வெளியேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்கு வெளியே அனைத்துக் கட்சி போராட்டம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை வெளியேற்ற வலியுறுத்தி, நாடாளுமன்றத்திற்கு வெளியே அனைத்துக் கட்சியினருடன் போராட்டம் நடத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில், பாஜக நியமன எம்எல்ஏ.க்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில், பாஜக நியமன எம்எல்ஏ.க்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Exit mobile version