ஆளுநர், முதலமைச்சர், துணை முதல்வர் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரியிலுள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலுள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்த பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த பணிகளையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

Exit mobile version