புயல் பாதித்த வேதாரண்யம் பகுதிகளை பார்வையிட்டார் ஆளுநர் – பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் பார்வையிட்டார். நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், நாகப்பட்டினத்திற்கு சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். வேதாரண்யம், வெள்ளப்பள்ளம், தோப்புத்துறை உள்பட 20 இடங்களில் பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இன்றிரவு திருவாரூர் செல்லும் ஆளுநர், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளை நாளை பார்வையிடுகிறார்.

Exit mobile version