வரும் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை

அரையாண்டு தேர்வு விடுமுறைகளுக்குப் பின்னர், வரும் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, கடந்த மாதம் நடைபெற்ற அரையாண்டு தேர்வுகளுக்கு பின்னர், விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறைக்கு பின்னர் ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணும் பணியினை கருத்தில் கொண்டு, 4ஆம் தேதிக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் பணி 2-வது நாள் மாலை வரை தொடர்ந்ததை அடுத்து, பள்ளிகள் வரும் 6ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நிர்வாக வசதிக்காகவும், மாணவர்களின் பாதுகாப்பிற்காகவும் பள்ளிக் கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Exit mobile version