ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியும், பாலமேட்டில் 16ஆம் தேதியும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 17ஆம் தேதி, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version