பதவி உயர்வுகள் வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

தமிழக அரசின் துறை சார்ந்த பதவி உயர்வுகள் வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பதவி உயர்வின் போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனை மாற்றி, குறிப்பிட்ட பதவி உயர்வுகளுக்கு மட்டும் பதவி உயர்வுக்கான ஆணையத்தின் பரிந்துரைகளை பெற்றால் போதுமானது என்று தெரிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், ஆரம்ப நிலை பதவி உயர்வுகளை, துறைத் தலைவர்களே அங்கீகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version