மேகேதாட்டு அணை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடகா மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான ஆரம்பகட்ட அனுமதியை மத்திய நீர்வளத்துறை கர்நாடக அரசுக்கு வழங்கியுள்ளது. இதையடுத்து மத்திய அரசு மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசு மீதும் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. நீதிபதி கான்வில்கர் அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. இதேபோல், கர்நாடக அரசு மீது புதுச்சேரி அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

Exit mobile version