தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அகாடமிகள் கொண்டுவர அரசு துரித நடவடிக்கை

தமிழகம் முழுவதும் 32 ஐஏஎஸ் அகாடமிகள் கொண்டுவர அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, வேளச்சேரியில் அறிவுத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் நலனில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார். மேலும், அரசு பள்ளிகளில் சிறந்த ஆங்கில பயிற்சி, யோகா, விளையாட்டு என அனைத்து துறையிலும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இந்திய அளவில் தமிழகத்தில் மட்டும் தான் பள்ளிக்கல்வித்துறைக்கு என, 28 லட்சத்து 757 கோடியே 66 லட்சம் நிதி ஒதுக்கப்படுவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Exit mobile version