நீட் தேர்வுக்கு தயாராகும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் வீரசோழன் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 804 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், நீட் பயிற்சி வகுப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் டிஜிட்டல் வகுப்பறையில் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், பயிற்சி வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். 42 மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர். நீட் பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுப்பதாக இருப்பதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version