பேருந்து நிறுத்தத்தில் நிற்காத அரசு பேருந்து – திமுக அரசால் அவதிக்குள்ளாகி வரும் பொதுமக்கள் !

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூர் பகுதியில் அரசு பேருந்து நின்று செல்ல வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அந்தப்பகுதி வழியாக சென்ற அரசுப்பேருந்து, பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. இது குறித்து, பயணி ஒருவர், நடத்துநரிடம் கேட்டபோது, பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துவதற்கு தங்களுக்கு எந்தவித ஆணையும் வரவில்லை என்றும், உயர்நீதிமன்றத்தில் ஆணை வாங்கினால், பேருந்தை நிறுத்த வேண்டுமா எனவும் அலட்சியமாக தெரிவித்துள்ளார். தெற்கு வள்ளியூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நின்று செல்ல வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவு இருந்தும், அதனை அரசு பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் மதிக்காமல் இருப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version