விருத்தாச்சலத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து விபத்திற்குள்ளானது!

அரசு பேருந்து ஒன்று, கடலூர், சேப்பாக்கத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் இருந்த பாசன வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது. பேருந்தில் பயணித்த 70 பேரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் ஓட்டுனருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version