இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, சஜித் பிரேமதாசா உட்பட 35 பேர் போட்டியிட்டனர். சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் இரவே வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. வாக்குகள் முழுவதும் எண்ணப்பட்ட நிலையில் கோத்தபய ராஜபக்சே 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகள் பெற்றுள்ளார். இதனால் 13 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Exit mobile version