கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் சம்பளத்தை குறைக்க முடிவு!

உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுளில், ஆட்குறைப்பு நடவடிக்கையில், சமீபத்தில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இது தகவல் தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சுந்தர் பிச்சையின் சம்பளமும் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் ஊழியர்களுடன் உரையாடிய சுந்தர் பிச்சை, உயர் அதிகாரிகளின் வருடாந்திர போனஸில் ஊதிய குறைப்பு இருக்கும் என தெரிவித்தார். எனினும், எவ்வளவு சம்பளம் குறைக்கப்படும் என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.

Exit mobile version