தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறவுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி நடிப்பில் பிரபல இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் கடந்த 1968-ம் ஆண்டில் வெளிவந்த அமரகாவியம் தில்லானா மோகனாம்பாள். பாலையா, தங்கவேலு, நம்பியார், மனோரமா, நாகேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் ரசிகர்களை கட்டிப்போட்ட இந்த திரைப்படம், கொத்தமங்கலம் சுப்புவால் ஆனந்த விகடனில் தொடராக எழுதப்பட்ட கதையை கொண்டு உருவாக்கப்பட்டது.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் 50-வது ஆண்டு பொன்விழா சென்னை வாணிமகாலில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அந்தப் படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் மற்றும் கலைஞர்களின் வாரிசுகள் கவுரவப்படுத்தப்பட உள்ளனர். மேலும் இந்த கொண்டாட்டத்தில் ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version