திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.64 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து நூதன முறையில் கடத்தி வரபட்ட 5 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று திருச்சி வந்ததுள்ளது. அப்போது வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பயணிகளின் உடமைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையை சேர்ந்த ராஜா என்பவர் தான் கொண்டுவந்த லேப்டாப் சார்ஜரில் 176 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை மறைத்து வைத்து நூதன முறையில் கடத்தியுள்ளார். இதன் மதிப்பு 5 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version