சிங்கப்பூர், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 63 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 63 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், நடத்தப்பட்ட சோதனையில், இலங்கையை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 6 பேர் தங்கள் உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 63 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Exit mobile version