திருச்சி விமான நிலையத்தில் தங்க கட்டிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த பட்டூர் ஜமான் என்பவர் தனது சூட்கேசில் மறைத்து எடுத்து வந்த 450 கிராம் எடையுள்ள17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்பது தங்க கட்டிகளை பறிமுதல் செய்ததுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version