உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் பதக்கம்

டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

28 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் 60நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். இந்தியாவின் சார்பாக 35 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா தங்கத்தை வென்றதன் மூலம் இத்தொடரில் இந்தியாவின் சார்பில் முதல் பதக்கத்தை வென்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Exit mobile version