வியாசர்பாடியில் ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை

சென்னை, வியாசர்பாடியில் காதலனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் இளம் பெண் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர்பாடி எஸ்.ஏ காலணி பகுதியை சேர்ந்த முனுசாமியின் மகள் காமேஷ்வரி, இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பனை காதலித்து வந்துள்ளார். இருவரும் வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் காமேஸ்வரி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version