இராணுவத்தில் இளைஞர்கள் சேர விழிப்புணர்வை ஏற்படுத்தும் ராட்சத பலூன்

இராணுவத்தில் இளைஞர்கள் சேர விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் சுற்றி வரும் ராட்சத பலூன் திருச்சியில் பறக்கவிடப்பட்டது.

இராணுவ வீரர்களின் இந்த சாகச பயணம் கடந்த 6-ந் தேதி காஷ்மீரில் தொடங்கியது. இந்தியா முழுவதும் 31 முக்கிய நகரங்கள் வழியாக கன்னியாகுமரிக்கு வருகிற 30-ந் தேதி செல்ல உள்ளது. இந்த நிலையில் இந்த சாகச பயணத்தின் ஒரு பகுதியாக, ராணுவ வீரர்கள் ராட்சத பலூனில் பறந்து செல்லும் நிகழ்ச்சி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

சாகச நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காக விளையாட்டு அரங்கிற்கு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். பார்வையாளர்கள் இராட்சத பலூனில் ஏறுவதற்கு வீரர்கள் அனுமதித்ததால் பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரும் ஆர்வமுடன் ஏறி மகிழ்ந்தனர்.

Exit mobile version