பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து..

பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தத்துக்கு உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு புவிசார் குறியீட்டை வழங்கியுள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான பழனி முருகன் கோயிலின் பிரசாதமாக பஞ்சாமிர்தம் உள்ளது. பழனி கோயில் பஞ்சாமிர்தம் பக்தர்களிடம் மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ளது. இந்தப் பஞ்சாமிர்தத்துக்குப் புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் உள்ள உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு தற்போது பழனி கோவில் பஞ்சாமிர்தத்திற்குப் புவிசார் குறியீட்டை வழங்கியுள்ளது. ஏற்கெனவே காஞ்சிபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், பத்தமடைப் பாய் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வெள்ளைப்பூண்டுக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது இந்நிலையில் தற்போது பழனி கோவில பஞ்சாமிர்தத்துக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version