ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் உலக புகழ் பெற்ற பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு வழங்கியதால் பால்கோவா உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் பால்கோவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட வேண்டுமென தமிழக அரசின் பால்கோவா கூட்டுறவு சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு வழங்கபட்டுள்ளது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் தயார் செய்யப்படும் பால்கோவா ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் தான் விற்பனை செய்ய முடியும். மற்ற ஊர்களிகளிலும், மாநிலங்களிலும் போலியாக தயாரித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்று பெயர் வைத்து, விற்பனை செய்ய முடியாது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு வழங்கியதால் கூட்டுறவு சங்கம், பால்கோவா உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். மேலும், விற்பனையும் உற்பத்தியும் பல மடங்கு உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version