ஆந்திர மாநில காவல்துறை இயக்குநராக பொறுப்பேற்ற கௌதம்

ஆந்திராவின் புதிய காவல்துறை இயக்குநராக கவுதம் சவாங் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அண்மையில் ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி, அம்மாநிலத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்தார். இதனிடையே ஆந்திராவின் புதிய காவல்துறை இயக்குநராக கவுதம் சவாங் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் தனது பொறுப்பை ஏற்பதற்காக அமராவதியில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்ற கவுதம் சவாங்கிற்கு காவல்துறையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குறிப்பாக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். இதனையடுத்து ஆந்திர மாநில காவல்துறை இயக்குநர் பொறுப்பை கவுதம் சவாங் முறைப்படி ஏற்றார்.

Exit mobile version