எஸ்பிஐ வங்கி கிளையில், கொள்ளை முயற்சியின் போது தீப்பிடித்து எரிந்த கேஸ் கட்டர்

கொள்ளையடிக்க சென்ற இடத்தில்  கேஸ் கட்டர் தீப்பிடித்ததால், கொள்ளையர்கள் தப்பியோடிய சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ளது  அஞ்செட்டி, அங்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியை கொள்ளையிட நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், வங்கியின் பின்புறமாக உள்ள இரும்பு ஜன்னலை கேஸ் கட்டரினால் துண்டிக்க முயன்றுள்ளனர். அப்போது ஜன்னலில் மாட்டப்பட்டிருந்த கேலண்டர் தீப்பிடித்து எரியத் தொடங்கி, பின்னர் கேஸ் வெல்டர் பகுதியிலும் தீ பரவியுள்ளது.

இதனைக் கண்ட கொள்ளையர்கள் பயத்தில் ஓட்டம் பிடித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version