பி.எஃப்.ஹெச் எண்ணெய் நிறுவன குழாயில் எரிவாயு கசிவு

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பி.எஃப்.ஹெச் நிறுவனத்துக்கு சொந்தமான குழாயில் எரிவாயு கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோதாவரி மாவட்டம் உப்புடியில் பி.எஃப்.ஹெச் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இங்குள்ள குழாயில் திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை செய்யப்பட்டது.

பின்னர் தகவலறிந்து வந்த ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து எரிவாயுவின் சீற்றத்தை கட்டுப்படுத்தினர்.

Exit mobile version