அடியாத்தே!….கேஸ் விலை 50 ரூபாய் அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணையின் விலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே மார்ச் 1, இன்றிலிருந்து கேஸ் சிலிண்டரின் விலையானது ஐம்பது ரூபாய் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையானது 1118.50 காசுகளுக்கு வந்துள்ளது. அதேபோல 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலையானது ரூபாய் 350.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோக்களுக்கான எல்.பி.ஜி விலையும் ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

Exit mobile version