திருமலையில் பவுர்ணமியையொட்டி மலையப்பசுவாமிக்கு கருடசேவை

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமியை ஒட்டி, நடந்த கருட சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமி கருட சேவையை முன்னிட்டு, உற்சவர் மலையப்ப சுவாமி சர்வ அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு, வாகன மண்டபத்தை அடைந்தார். அங்கு தங்க கருட வாகனம் மீது எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு தீப, துபா, நைவேத்தியம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, புறப்பட்ட உற்சவர் மாட வீதிகளில் வலம் வந்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Exit mobile version