விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல விதமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
ராஜபாளையம் தர்மாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நிர்வாகிகள் சார்பில், நற்பணி மன்றத்தினர் சார்பாக இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறன. அத்தி வரதராஜ கணபதி மற்றும் ருத்ர கணபதி உள்ளிட்டவை பிரமாண்ட சிலைகளாக உருவாக்கப்பட்டுள்ளது. டிராக்டர் வண்டியுடன் கூடிய விநாயகர், நிராவி ரயில் இன்ஜின் ஓட்டும் விநாயகர், சைக்கிள் ஓட்டும் விநாயகர், ஜீப் ஓட்டும் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.