கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சேதங்களும், பாதிப்புகளும் பெரிதும் குறைந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சேதங்களும், பாதிப்புகளும் பெரிதும் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், பாதிப்புகள் இன்னும் மோசமாக இருந்திருக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version