4 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் கஜா புயல் – மெதுவாக நகர்வதால் கரையைக் கடப்பது தாமதமாகும் என தகவல்

கஜா புயல் நவம்பர் 15-ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, மேலும் தாமதமாகலாம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான கஜா புயல், கடலூர் – பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை அருகே 690 கிலோமீட்டர் தொலையில் உள்ள கஜா புயல் மணிக்கு 4 கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்வதால் கரையைக் கடக்க கால தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 7 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 5 கிலோமீட்டர் வேகத்திற்கு குறைந்த கஜா புயல், தற்போது 4 கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்வதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

 

Exit mobile version