தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்த சேவை, டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த தொலைபேசி சேவை அம்பத்தூரில் உள்ள அம்மா தகவல் சேவை மையத்தில் இருந்து செயல்படுத்தப்படுகிறது. குடும்ப வன்முறை, பாலியல் தொல்லை தொடர்பான உளவியல் ரீதியான உதவிக்கு 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் அதற்குரிய ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள 24 மணி நேர சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

Exit mobile version