நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 4 பேர் பலி

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள நாகலு தெருவில் உள்ள ஒரு வீட்டில் தீபாவளிக்கு விற்பனை செய்வதற்காக பட்டாசுக்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. திடீரென்று அங்கிருந்த நாட்டு வெடிகள் வெடித்து சிதறியது.

இதில், 3 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள், உடனடியாக தீயை அணைத்தனர். நாட்டு வெடிகள் தயாரிக்கப்பட்ட போது, வெடி விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. விபத்தில், வீடு மற்றும் அங்கிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.

பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சர்பூதீன் பானு என்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version