சிவகங்கையில் இளைஞர் வெட்டி படுகொலை: 4 பேர் கைது

சிவகங்கையில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கையில் கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் கொலை வழக்கு ஒன்றில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பிய ராஜசேகரன் என்பவரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நள்ளிரவு நடத்தப்பட்ட வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த வந்த 4 பேரை காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது ராஜசேகரன் கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version