தேர்தல் பிரசாரத்திற்காக தனது தாயாரை இழிவுப்படுத்தவேண்டாம் என உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூன் மகள் பன்சுரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, பிரதமர் நரேந்திர மோடி அளித்த நெருக்கடியின் காரணமாக பாஜக மூத்த தலைவர்கள் இறந்ததாக பட்டியலிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர்களான அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரை பிரதமர் கொடுமைப் படுத்தியதாகவும் உதயநிதி தெரிவித்திருந்தார்.
Discussion about this post