திமுக அமைச்சர் நாசருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்!

திருவள்ளூரில் ஒரு நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர் ஒருவர் நாற்காலியை எடுத்து வரவில்லை என்பதற்காக அவர்மீது கல்லைக் கொண்டு அடித்த திமுக அமைச்சர் நாசருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பிரத்யேகமாக பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், விடியாத திமுக அரசின் அமைச்சர்களின் அலப்பறைகள் சொல்லி மாளமுடியாதது, அந்த அளவுக்கு அவர்களின் அலப்பறைகளை தாங்கிக்கொண்டு சகித்துக்கொண்டு இருக்கும்படியான தன்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர்,ஒட்டுமொத்த ஆளும்கட்சி அமைச்சர்களின் செயலானது கேலிக்கூத்தானதாக மட்டுமே இருக்கிறது, அதுவும் அமைச்சர் நாசர் கோமாளித்தனமான வேலைகளை செய்யக்கூடியவர் என்று பதிலளித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார். தன்மீது கவனக்குவிப்பு விழுவதற்காக பல வேலைகளில் அமைச்சர் நாசர் ஈடுபடக்கூடியவர் என்று கூறிய அவர், தன் தொண்டரையே கல்லைக் கொண்டு தாக்குவது என்பது திமுக கற்காலத்திற்கு சென்றுவிட்டது என்பதைக் குறிக்கிறது என்று பதிலளித்தார்.YouTube video player

Exit mobile version