கர்மவீரர் காமராஜர் பற்றி இழிவாக பேசிய ஆ.ராசா…என்.ஆர். தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம்…முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேச்சு!

பெருந்தலைவர், கர்மவீரர், ஏழைப் பங்காளர் என்று அனைவராலும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களை விடியாத திமுகவின் எம்பி ஆ.ராசா இழிவாக பேசியுள்ளார். இதனைக் கண்டிக்கும் விதமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பங்கு கொண்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடியாத திமுகவினர் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டு, மக்களின் நலனின் அக்கறைக் காட்டாமல் மறைந்த முன்னாள் தலைவர்களைப் பற்றி மிகவும் இழிவாக பேசி வருகிறார்கள். இதையெல்லாம் கண்டும்காணாமல் ஊக்குவித்துக் கொண்டும் இருக்கிறார் இந்த விடியாத திமுகவின் முதல்வர் ஸ்டாலின். அவர் சர்வாதிகாரி போல செயல்படுகிறார். குறிப்பாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் கருத்துக்களை முடக்கும் விதமாக ஜனநாயகத்தன்மையுடன் நடந்துகொள்ளாமல் சர்வாதிகாரி போலவே நடக்கிறார். கருத்துக்களை காது கொடுத்துக் கேட்காமல், கருத்துச் சொல்பவர்களை கைது செய்வது சிறையில் அடைப்பது போன்ற காரியங்களில் இறங்குகிறார். மேலும் ஊடகவியலாளர்கள் சிலர் அவரது ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை சொன்னால் அவர்களை எல்லாம் சிறையில் தள்ளுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனைக் கடித்த கதையாக மறைந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களை கொச்சைப் படுத்தியுள்ளனர் திமுகவினர். தான் திமுகவில் இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக அவ்வப்போது மதங்களையும் பெரிய தலைவர்களையும் சமூகங்களையும் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார் விடியாத திமுகவின் ஸ்பெக்ட்ரம் ஊழல்வாதி ஆ.ராசா. இப்படி பேசுவது என்பது ராசாவுக்கு கை வந்த கலை. இதனை முதலமைச்சர் கண்டிக்கிறாரா என்று தெரியவில்லை. தூங்குபவரை எழுப்பலாம் தூங்குவதுபோல் நடிப்பவரை எழுப்ப முடியாது என்று தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்துக்களை தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

அவரது விரிவான பேட்டியின் காணொளி கீழே உள்ளது. பார்ப்பதற்கு காணொளியை சொடுக்கவும்!

Exit mobile version